பேட்டி
2
”லீனா
…. பேட்டிக்கு தயாரா?”
‘திரைநிலா’ நிருபர்
சுக்ரீவன் வெற்றிலை
குதப்பியபடி கேட்டார்.
“இதோ
… வந்துட்டேன் சார்”
– லீனாவின் அம்மா
சம்பங்கி பரபரத்தாள்
“ கதாநாயகியா
’அடியேனை பாரம்மா’
படத்துல அறிமுகமாகுறா.
கொஞ்சம் விலாவாரியாக
லீனாவின் பேட்டிய
போடுங்க அண்ணா”
லீனா பேட்டியின்
ஆரம்பத்தில் சற்று
மிரண்டு போயிருந்தாள்.
சுக்ரீவன்
கனைத்துக் கொண்டார்
“குழந்தை நட்சத்திரம்,
குமரி நட்சத்திரம்
– இரண்டுக்கும் என்ன
வித்தியாசம் உணர்றீங்க?”
லீனா
– “ ‘அங்க்கிள்…..என்ன
கண்டுபிடிங்க’ன்னா
குழந்தை நட்சத்திரம்;
‘மாமா….என்ன
கட்டிப்பிடிங்க’ன்னா
குமரி நட்சத்திரம்”
“அதில்ல
லீனா……………….. கதாநாயகியா
ஆனதும் உன்
பொறுப்பு கூடியிருக்கும்.
அதை சொல்லு”
“குழந்தை
நட்சத்திரம் கேரக்டரில்
நடிக்கும்போது பொறுப்பாய்
பேசுவேன் – ’வாழ்க்கைப்
படகை அம்மா
அப்பா என
இரு துடுப்புகள்
செலுத்தணும்’…………..’குடும்பம்
ஒரு கோவில்,
பெண் ஒரு
குத்துவிளக்கு’……………’மகிழ்ச்சி
ஒரு பாதை,
இலக்கு இல்லை”
“ஆனா
குமரி நட்சத்திரம்
ஆனதும் ‘உன்னை
மோதியதில் என்
இடுப்பு பிடிச்சுகிடுச்சு,
உன்னையும் எனக்கு
பிடிச்சுகிடுச்சு’……………………’முத்தம்
என்று சொன்னால்தான்
உதடுகள் கூட
ஒட்டும்’…………………..’தாடியோட
நீயும் டாடியோட
நானும் சுத்துரோம்’
என பொறுப்பில்லாமல் வசனம் பேசுவேன்”
சுக்ரீவன்
மேவாயை சொறிந்தார்
“என்னமோ இடிக்குதே”.
சம்பங்கி சொன்னாள்
“அண்ணா….. நாந்தான்
மோர் கொண்டு
வர்றப்ப இடிச்சுட்டேன்”
“அதில்ல….
லீனா விளையாட்டா
பதில் சொல்றா”
“அண்ணா…..
எத்தனை இந்திக்கார
குட்டிகளுக்காக நீங்களே
பதில் எளுதறீங்க
– ’தமிழ் ரசிகர்
விருப்பம்; என்
வாழ்வின் திருப்பம்’
ன்னு. அத
போல எளுதி
உடுங்கண்ணே”
சுக்ரீவன்
அடுத்த கேள்வியை
தொடுத்தார் “எப்படிப்பட்ட
பாத்திரமும் ஏற்று
நடிப்பீர்களா?”
லீனா
வெகுநேரம் யோசித்தாள்
“ ’கடலும் நதியும்’
படத்துல பெரிய
குடம் என்ற
பாத்திரத்தை தூக்க
சிரமப்பட்டேன்; அப்போது
நான் சிறுமி;
இப்போது உடல்
பலம் வந்துவிட்டது.
அண்டா மாதிரி
பாத்திரமும் ஏற்று
நடிப்பேன்”
சுக்ரீவன்
‘ஙே’ என்று
சம்பங்கியை நோக்கினார்
“எந்த பாத்திரமும்
ஏற்று அந்த
கேரக்டராவே மாறிடுவேன்’னு
சொன்னதா போட்டுக்குங்க அண்ணா”
கேள்வி
‘எந்த மொழி
படங்களில் நடிப்பீங்க?”
லீனா
“நான் ஏற்கனவே
தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம்
எல்லா மொழிகளிலும்
நடிச்சிருக்கேன். என்னோட
‘மேனகா பல்பொடி’
விளம்பரம் நாலு
மாநில டிவிக்களில்
வருதே!”
சுக்ரீவன்
சுதாரித்தார் “எந்த
மொழி வாய்ப்பு
வந்தாலும், வாய்ப்பு
தந்த தமிழில்
நடிக்கவே ஆசை’
ன்னு போட்டுக்கரேன்.”
என்றபடி அடுத்த
கட்டம் வந்தார்.
“ லோ-பட்ஜெட்
படத்தில் நடிக்கறோம்னு
வருத்தப்படறீங்களா?”
லீனா
“இன்று லோ-பட்ஜெட்;
நாளை தமிழக
பட்ஜெட்”
சுக்ரீவன்
“அய்யோ………………….பயலுகதான்
பஞ்ச் பேசி
படுத்தறானுக. உனக்கு
எவன் இப்படி
சொல்லிக் கொடுத்தான்.
சரி சரி…..
புது இயக்குனர்கள்
முயற்சிக்கு துணை
நிற்பேன்’னு
போட்டுக்கரேன்”
சுக்ரீவன்
“சம்பங்கி………….நான்
கொஞ்சம் மெருகேத்தி
பேட்டியை போட்டுக்கறேன்.
லீனா வாயை
கட்டுப்படுத்து. ஜாஸ்தி
பேசறா. மற்றவன்
என் போல்
இருக்க மாட்டான்”
என்றபடி எழுந்தார்.