Monday 27 May 2013

நடிகை லீனாவின் பேட்டி2


பேட்டி 2
லீனா …. பேட்டிக்கு தயாரா?” ‘திரைநிலாநிருபர் சுக்ரீவன் வெற்றிலை குதப்பியபடி கேட்டார்.

இதோவந்துட்டேன் சார்” – லீனாவின் அம்மா சம்பங்கி பரபரத்தாள்கதாநாயகியா  ’அடியேனை பாரம்மாபடத்துல அறிமுகமாகுறா. கொஞ்சம் விலாவாரியாக லீனாவின் பேட்டிய போடுங்க அண்ணா

லீனா பேட்டியின் ஆரம்பத்தில் சற்று மிரண்டு போயிருந்தாள்.

சுக்ரீவன் கனைத்துக் கொண்டார்குழந்தை நட்சத்திரம், குமரி நட்சத்திரம்இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உணர்றீங்க?”

லீனா – “ ‘அங்க்கிள்…..என்ன கண்டுபிடிங்கன்னா குழந்தை நட்சத்திரம்; ‘மாமா….என்ன கட்டிப்பிடிங்கன்னா குமரி நட்சத்திரம்

அதில்ல லீனா……………….. கதாநாயகியா ஆனதும் உன் பொறுப்பு கூடியிருக்கும். அதை சொல்லு

குழந்தை நட்சத்திரம் கேரக்டரில் நடிக்கும்போது பொறுப்பாய் பேசுவேன் – ’வாழ்க்கைப் படகை அம்மா அப்பா என இரு துடுப்புகள் செலுத்தணும்’…………..’குடும்பம் ஒரு கோவில், பெண் ஒரு குத்துவிளக்கு’……………’மகிழ்ச்சி ஒரு பாதை, இலக்கு இல்லை

ஆனா குமரி நட்சத்திரம் ஆனதும்உன்னை மோதியதில் என் இடுப்பு பிடிச்சுகிடுச்சு, உன்னையும் எனக்கு பிடிச்சுகிடுச்சு’……………………’முத்தம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்’…………………..’தாடியோட நீயும் டாடியோட நானும் சுத்துரோம்என பொறுப்பில்லாமல் வசனம் பேசுவேன்” 

சுக்ரீவன் மேவாயை சொறிந்தார்என்னமோ இடிக்குதே”. சம்பங்கி சொன்னாள்அண்ணா….. நாந்தான் மோர் கொண்டு வர்றப்ப இடிச்சுட்டேன்

அதில்ல…. லீனா விளையாட்டா பதில் சொல்றா

அண்ணா….. எத்தனை இந்திக்கார குட்டிகளுக்காக நீங்களே பதில் எளுதறீங்க – ’தமிழ் ரசிகர் விருப்பம்; என் வாழ்வின் திருப்பம்ன்னு. அத போல எளுதி உடுங்கண்ணே

சுக்ரீவன் அடுத்த கேள்வியை தொடுத்தார்எப்படிப்பட்ட பாத்திரமும் ஏற்று நடிப்பீர்களா?”

லீனா வெகுநேரம் யோசித்தாள் “ ’கடலும் நதியும்படத்துல பெரிய குடம் என்ற பாத்திரத்தை தூக்க சிரமப்பட்டேன்; அப்போது நான் சிறுமி; இப்போது உடல் பலம் வந்துவிட்டது. அண்டா மாதிரி பாத்திரமும் ஏற்று நடிப்பேன்

சுக்ரீவன்ஙேஎன்று சம்பங்கியை நோக்கினார்எந்த பாத்திரமும் ஏற்று அந்த கேரக்டராவே மாறிடுவேன்னு சொன்னதா போட்டுக்குங்க அண்ணா

கேள்விஎந்த மொழி படங்களில் நடிப்பீங்க?”

லீனாநான் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லா மொழிகளிலும் நடிச்சிருக்கேன். என்னோடமேனகா பல்பொடிவிளம்பரம் நாலு மாநில டிவிக்களில் வருதே!”

சுக்ரீவன் சுதாரித்தார்எந்த மொழி வாய்ப்பு வந்தாலும், வாய்ப்பு தந்த தமிழில் நடிக்கவே ஆசைன்னு போட்டுக்கரேன்.” என்றபடி அடுத்த கட்டம் வந்தார்.

லோ-பட்ஜெட் படத்தில் நடிக்கறோம்னு வருத்தப்படறீங்களா?”

லீனாஇன்று லோ-பட்ஜெட்; நாளை தமிழக பட்ஜெட்

சுக்ரீவன்அய்யோ………………….பயலுகதான் பஞ்ச் பேசி படுத்தறானுக. உனக்கு எவன் இப்படி சொல்லிக் கொடுத்தான். சரி சரி….. புது இயக்குனர்கள் முயற்சிக்கு துணை நிற்பேன்னு போட்டுக்கரேன்” 

சுக்ரீவன்சம்பங்கி………….நான் கொஞ்சம் மெருகேத்தி பேட்டியை போட்டுக்கறேன். லீனா வாயை கட்டுப்படுத்து. ஜாஸ்தி பேசறா. மற்றவன் என் போல் இருக்க மாட்டான்என்றபடி எழுந்தார்.

நடிகை லீனாவின் பேட்டி1


பேட்டி 1
நடிகை லீனா வீடு முன்னே பெருங்கூட்டம் திரண்டு நின்றது.
ஹிந்து கலாசார சங்கக் குழுவினர் கோஷம் போட்டபடி இருந்தனர்.
இந்திய பண்பாட்டை பழிக்காதே
கற்பு என்பது பற்பசை அல்ல
தில்லாலே தில்லாலே ….உன் பேட்டி நல்லால்லே

லீனாவுக்கு இந்த கூச்சல் பிடிபடவில்லை. லீனாவின் அம்மா சம்பங்கி 100 சுழற்றினாள். ”இன்ஸ்பெக்டர் பூமினாதன் இருக்காரா……”. சினிமா போலீஸ் போல் இல்லாமல், சீக்கிரமே வந்துவிட்டனர் போலீஸ்.

இங்கே என்னய்யா பிரச்னை. எதுக்கு கூச்சல், குழப்பம்? யாருய்யா உங்க தலைவன்?” போலீஸ் தோரணைக்கு பதில் வந்தது. நீலத் துண்டு போட்ட ஒருவன் முன்னால் வந்தான்.

திரைப்பூவார இதழை தூக்கிப் பிடித்தான்இதுல நடிகை லீனா கொடுத்த பேட்டியில் நம் பண்பாட்டை கேவலமா பேசியிருக்காங்க
கற்பு என்பது எனக்கு பெரிய விஷயமல்ல. அபார்ஷன் செய்து கொள்வது தவறல்லஎன்று பேட்டி கொடுத்துள்ளார்நீலத் துண்டு தலைவர் சீறினார்.

 பூமினாதன் பத்திரிக்கையை புரட்டிவிட்டு, பதட்டமாய் லீனாவின் அம்மாவிடம் திரும்பினார் ஏன் இப்படில்லாம் பேட்டி தர்றீங்க? வம்பை விலை கொடுத்து வாங்கறீங்க?”

சம்பங்கி லீனாவிடம் சிடுசிடுத்தாள்ஏண்டி……போன வாரம்திரைப்பூவுக்கு என்ன கருமத்தை சொல்லித் தொலைச்சே? ’அபார்ஷன் செய்துகொள்வது தவறல்லன்னு சொல்லி ஏண்டி உயிர எடுக்கரே?”

அய்யநான் என்ன லூசா அப்படி பேட்டி கொடுக்கலீனா கோபப்பட்டாள்.
பூமினாதன் எரிச்சல் பட்டார்இதுல தெளிவா போட்டிருக்கு…..நடிகை லீனா ஜில்ஜில் பேட்டிகற்பு என்பது எனக்கு பெரிய விஷயமல்ல. அபார்ஷன் செய்து கொள்வது தவறல்ல” 

அய்யோடா …. நான் சொன்னதை அந்த மண்டு நிருபர் திரித்துப் போட்டுட்டான்லீனா ரீவைண்ட் செய்தாள். “ திரைப்பூவிற்கு தந்த பேட்டி இதுதான்

நான் சக நடிகைகளை போட்டியாக நினைப்பதில்லை. நட்பு என்றே நினைத்து உதவிகள் செய்கிறேன்.

லேகாஸ்ரீ தெற்றுப்பல் சரி செய்யபல்மொனரி ஆர்ட்டரிஆபரேஷனுக்கு சிபாரிசு செய்தேன்.   
ஜோஷ்னாவின் உதடுகளை சரி செய்யலிப்போசக்ஷன்ஆபரேஷனுக்கு எற்பாடு செய்தேன்.  
தூபிகாவின் கழுத்து வலிக்குநெக்டர் சர்ஜரிஆபரேஷனுக்கு நான்தான் உதவி செய்தேன்.  
ஜிகினாஸ்ரீ சப்பைமூக்கு எடுப்பாகச் செய்யபாசநேச மாக்சில்லரிஆபரேஷனுக்கு சிபாரிசு செய்தேன்.  

இப்படிதான் சக நடிகைகளுக்கு அழகுக்கலை கற்பித்து நட்புடன் பழகுகிறேன். உடலழகை மேம்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

கற்பிப்பது எனக்கு பெரிய விஷயமில்லை. ஆபரேஷன் செய்து கொள்வது தவறல்லஎன பேட்டியை முடித்திருந்தேன்.

அடப்பாவீ….இதைகற்பு என்பது எனக்கு பெரிய விஷயமில்லை. அபார்ஷன் செய்து கொள்வது தவறல்லன்னு போட்டிருக்கானே பாவி நிருபர்?” லீனாவின் பெரிய விழிகள் மேலும் விரிந்தன.

சார் இப்ப என்ன பண்றது?” சம்பங்கி கேட்டாள். “சார்சார்என்று கூவ பூமினாதன் லீனாவின் கண்ணழகை ரசிப்பதை விட்டு சுதாரித்தார்.
ஆங்……கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கு. மன்னிப்பு கேட்டுருங்கஎன்றார் பூமினாதன். சம்பங்கிஅய்யோமன்னிப்பு கேக்கறதா. மற்றவளுங்க லீனாவை மதிப்பாளுகளா? ஏகத்துக்கு வடனாட்டு குட்டிங்க கோடம்பாக்கத்துல  குந்தியிருக்காளுக. இதுல மன்னிப்பு வேறயா?” என ஒப்பாரி வைத்தாள்.

லீனா பல்லைக் கடித்தாள். ”அம்மா புலம்பாதசெல்பேசியின் பொத்தன்களை தட்டி, தேன் தடவினாள்சார்சார் .. ஒரு சின்ன ப்ரச்னை…” சொல்லி முடிக்கும்போது 28 முறைசார்போட்டிருந்தாள்.
செல்பேசி பூமினாதன் கைக்குப் போனது. “அமைச்சர் வேலவன் பேசறார்லீனா கிசுகிசுப்பாய் சொல்ல, “சொல்லுங்க சார்என 29ல் தொடங்கி 47வது சாரோடு நிறுத்தினார் பூமினாதன்.

அமைச்சர் திட்டம் ஒன்னு சொல்லியிருக்காரு. போராட்டத் தலைவனை படிய வெச்சுடலாம் என்றபடி வாசல்படி போனபடி இருந்தார்.
நீலத்துண்டு தலைவன், பூமினாதன் வெளிவந்ததும் மேலும் உற்சாகமாக கோஷமிட்டான்.

வள்ளுவர் பூமியில் வெள்ளோட்டம் பார்க்காதே
கண்ணகி மண்ணை விட்டு, கண்ணழகியே ஓடு

பூமினாதன் கையமர்த்தினார்தம்பிகளே. பேட்டி கொடுத்தது லீனா குப்தா என்ற இந்தி நடிகை. தமிழ் நடிகை லீனா கிடையாது. ‘திரைப்பூவிளக்கம் கொடுத்துள்ளது. ”

பூமினாதன் விளக்கம் கேட்டதும் பல வில்லன்கள் விலகினர்; சில விளக்கெண்ணைகள் கோஷம் போடுவதை நிறுத்தினர். லீனா வீடுமுன்  அமைதி வந்தது.

ஹிஹி…. அமைச்சர் வரை போய்ட்டீங்களே. இப்போசத்தமின்றி முத்தமிடுபடத்தில்தானே நடிக்கறீங்கபூமினாதன் தன் சினி அறிவை காட்டிவிடு விடை பெற்றார்.