Saturday 22 June 2013

நடிகை லீனாவின் பேட்டி 4

பேட்டி 4
பிரம்மாண்டமானசிந்தாமணிஓட்டலில் லீனா நுழைய, வரவேற்பு பெண்ணிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. லீனாவை விட அதிக உதட்டுச்சாயம் பூசிவாய்- மையே வெல்லும்என உணர்த்தினாள்.

யெஸ்……என்ன உதவி வேணும்” – கொஞ்சலாய் கேட்டாள் வரவேற்பு பெண்.

மிஸ்டர் சுமந்த் சாட்டே…… ‘கஹானிபத்திரிக்கை நிருபரை மீட் பண்ணனும்

ரூம் நம்பர் 303”

தாங்க்ஸ்” – என்றபடி லீனா ஒயிலாய் சுழன்று, அன்ன நடை போட்டு நடப்பதை லாபியில் இருந்த 48 கண்களில், 46 கண்கள் ரசித்தன. பொறாமையுடன் பார்த்தன வரவேற்பு பெண்ணின் 2 கண்கள்.

303-ஐ நெருங்கி லீனா பஸ்ஸரை அழுத்தினாள்……வழுக்கை தலையும், அரைக்கை பனியனுமாக சுமந்த் சாட்டே வெளிப்பட்டான்; லீனாவைப் பார்த்து பற்களை வெளிப்படுத்தினான்யெஸ் பேபிஎன வழிந்தான்.

சார்….ஐ ஆம் டமில் ஆக்ட்ரெஸ் லீனா. உங்க பத்திரிக்கையில் என் பேட்டி வந்தால்  பாலிவுட்ல ஒரு சான்ஸ் அடிக்குமேஎன படபடத்தாள்.

….யெஸ்…..ஷ்யூர்சுமந்த் தடுமாறினான்.

உரிமையாக உள்ளே வந்தாள் லீனா. சோபாவில் சாய்ந்து அமர்ந்ததே ஒரு புதுப்பட போஸ் போல் இருந்தது வாவ்ரூம் ரொம்ப அற்புதமா இருக்கு

நீங்க வந்ததும் இன்னும் அழகு கூடிடுச்சு 

அய்யோடா …. ரொம்ப புகழறீங்கலீனா குலுங்கிச் சிரித்து களேபரம் செய்தாள்.

இதுல என்ன தவறு? நீங்க உண்மையில் அழகுதான். இந்தி நடிகைகள் எல்லாம் வெறும் மேக்கப் அழகிகள்என்ற அவன்மிஸ் நம்ம பேட்டிக்கு வசதியா சில ஸ்டில்ஸ் எடுக்கணும்என அடி போட்டான்.

………தாராளமாக லீனாதாராளமாகஎன அழுத்திச் சொன்னாள். “வந்த விருந்தினருக்கு சாப்பிட ஏதும் இல்லையாஅவளது பெரிய விழிகள் மேலும் விரிந்தன.

இதோடீ & பிஸ்கட்ஸ். தனி ஒரு நடிகைக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்அவன் பரபரத்தான்.

டீக்கோப்பை, பிஸ்க்கட் தட்டுடன் அவன் லீனாவின் அருகில் வர, தட்டை வாங்க முயன்ற லீனாவின் பட்டுக் கைபட்டு, தட்டு தட்டுத்தடுமாறி தரையில் கவிழ்ந்தது.

சாரி…” என சாரி சரிய லீனா எழுந்தாள். சுமந்த் தடுமாறிரூ….ம் பாயை கூப்பி....வா?” என குழறினான்.

லீனா தலை குனிந்தபடி நின்றாள். ”ப்ளீஸ்….. ரூம் பாய் வேணாம். ஒரு வாளி தண்ணீர் கொடுங்க. நானே க்ளீன் பண்றேன்

லீனாவிடமிருந்து பார்வை விலக்காமல் அவன் பாத்ரூம் உள்ளே சென்றான். உள்ளே பக்கெட்டில் தண்ணீர் நிரப்பும் சத்தம்.

லீனா அவனை தொடர்ந்து சென்று பாத்ரூம் கதவருகே கை வைத்து ஒய்யாரமாய் நின்றாள். “சூப்பர் போஸ்சுமந்த் தண்ணீர் பிடித்தபடி தன்னிலை மறந்தான்.

லீனா சட்டென பாத்ரூம் கதவை இழுத்து  மூடினாள். பிறகு தன் இடுப்பு சேலையை இழுத்து  மூடினாள். பாத்ரூம் வெளித் தாழ்ப்பாள் போட்டு நின்றாள்.

லீனாஏன் கதவை பூட்டுரேஉள்ளே அவன் அலற-

வெளிக் கீ இருந்தா தப்பிச்சுக்கோடா பயலே” – என்றாள்.

இடையில், இடைவெளியில் லீனாவின் இடையில் மயங்கிய மடையன் கடைசியாய்த் தெளிந்தான்.

உனக்கு என்ன வேணும்என்றான்.

அப்படி வா வழிக்கு, காலையில் அமைச்சர் வேலவனை பேட்டி கண்ட பேடி, எங்கேடா அந்த சி.டி?” லீனா குரலில் கடுமை.

டீப்பாய் மேலேதான் இருக்கு. என்னை திறந்து விடுஎனஎன்னை மறந்து விடுசொல்லும் ஏழை ஹீரோவைப் போல சுமந்த் புலம்பினான்.

விருட்டென டீப்பாய் மேல் இருந்த சி.டியை கைக்குள் எடுத்து ரவிக்கைக்குள்  வைத்தாள். நக்கலாய் பாட்டுப் படித்தாள் --
நான் ஒரு சிந்து…………..கக்கூசுல பூந்து, குழாயத் தொறந்து வுட்டேன்.
வாளி இருந்தும், சொம்பு இருந்தும், தண்ணி எதுவுமில்ல…. அடக் கழுவ முடியவில்ல
எனசிந்து பைரவிராகத்தில் லீனா பாடி, சில விருது பெற்ற கலைஞர்களின் கண்ணீர் சிந்துவதற்கு காரணமானாள்.

ஹே……ஹே…..” என சுமந்த் கதவை தட்டிக் கொண்டிருக்கராம்…..ராம்என லீனா பழிப்புக் காட்டிவிட்டு, ரூமை விட்டு வெளியேறி, ஹோட்டலின் பின்பக்க வழியாக நடக்க தொடங்கினாள்..

மின்னல் போல, ஜெனரேட்டர் ரூம் நுழைந்த லீனாவின் உடல் மீதுஜெனரேட்டரின் காற்று மோத லீனாவின் உடை அவள் உடலுடன் ஒட்டி ரூமின் வெப்பம் கூடியது. காவலாள் வைத்த சல்யூட்டை சட்டை செய்யாமல் வெளியேறினாள்.

தடதடவென பின் வாசல் வந்த லீனா, தயாராக நின்றமருதம்காருக்குள் தன்னைச் சொருககார் காரிகையோடு பறந்தது.

கூகுள் போட்டு தேடினாலும் கிடைக்காதபடி பதுக்கியிருந்த சிடி-யை பதுமை பதூசாய் எடுத்தாள்.

லேப்-டாப்பை எடுத்து சிடி-யை சொருகிலப்-டப்போடு திரையை நோக்கினாள் லீனா. கன்னிப்பொறிக்கு கணிப்பொறி கட்டுப்பட்டு திரை திறந்தது. அமைச்சர் வேலவன் திரையில் தோன்றினார்
************************

நடிகை லீனாவின் பேட்டி3

பேட்டி 3

நடிகை லீனாவும், அவள் அம்மா சம்பங்கியும் அமைச்சர் வேலவன் முன் பதைபதைப்பாக நின்றிருந்தனர்.  ’தமிழ் நேசன்படித்துக்கொண்டிருந்த அமைச்சர் வேலவன்என்ன லீனா…..இவ்வளவு படபடப்பு? இல்லையா படப்பிடிப்பு?” என்றார் கவித்துவமாக.

 சம்பங்கி லீனா ……போன வாரம்திரைப்பூவுக்கு ஒரு பேட்டி கொடுத்தாள். அது இப்போ பெரிய ப்ரச்னை ஆயிடுச்சுஎன படபடத்தாள்.

பேட்டியும் போட்டியும் திரையுலகில் சகஜம்தானே?”

அய்யஇவ கொடுத்த பேட்டியை அந்த நிருபர் விமலன் பதிவு செய்து மிரட்டறான்

அப்படி என்ன கண்ணு சொன்னே? அரசியல் வசனம் ஏதும் பேசிட்டியா 

அய்யோடா …. நான் சொன்னது என்னன்னாகுச்சுப்புடி கலை தெரிந்ததால் திரை உலகில் முன்னேற முடிந்ததுஎன்று. அந்த மண்டு நிருபர் அதை பதிவு பண்ணிட்டு இப்ப மிரட்டறான்”  லீனா ரீவைண்ட் செய்தாள்.

இதுல என்ன தவறு? எதுக்கு அந்த விமலன் உன்னை மிரட்டணும்?” வேலவன் குறுக்கிட்டார்.

அது…..அது வந்து…………” லீனாவின் பெரிய விழிகள் மேலும் விரிந்தன.
சொல்லு கண்ணு. சொன்னால்தானே சரி செய்ய முடியும். உன்னை மாதிரி தமிழ் நங்கைகளுக்கு உதவதானே அமைச்சர் பதவி

“……………..” லீனா தலை குனிந்தபடி நின்றாள்.

அமைச்சர் சம்பங்கியை நோக்கினார்.

சார் ………. குச்சுப்புடி கலை தெரிந்ததால் திரை உலகில் முன்னேற முடிந்ததுஎன்று இவள் சொல்றப்பகுச்சுப்புடிக்கு பதிலா நாக்குழறி மாற்றிச் சொல்லிட்டா. இப்ப என்ன பண்றது?” சம்பங்கி கேட்டாள்.

வேலவன் சிரித்து விட்டார். லீனாவை மேலும் கீழும் பார்த்தார் 

குச்சுப்புடிக்கு பதிலா என்ன கண்ணு சொன்னே?”

சார்போங்க சார்என்று லீனா தவிப்பதை ரசிப்பதை விட்டு சுதாரித்தார்.
சம்பங்கிஅய்யோஇதை பெரிசுபடுத்தி விமலன் போடறதா மிரட்டறான். 10 லட்சம் பணம் கேக்குறான். இது தெரிஞ்சா மற்றவளுங்க லீனாவை மதிப்பாளுகளா? ஏகத்துக்கு வடனாட்டு குட்டிங்க கோடம்பாக்கத்துல  குந்தியிருக்காளுக. இதுல இவ பேரு ரிப்பேர் ஆனா என்ன பண்றதுஎன ஒப்பாரி வைத்தாள்.

லீனா பல்லைக் கடித்தாள். ”அம்மா புலம்பாதஎன்றபடி அமைச்ச்ரிடம் தேன் தடவினாள்சார்சார் .. இந்த சின்ன ப்ரச்னையை நீங்கதான் தீர்த்து வைக்கணும்…”

அமைச்சர் வேலவன் யோசித்தார் திரைப்பூ குழுவசந்த மாளிகைனு பொத்தேரியில ஒரு ஓட்டல் கட்டறான். இரு அவனை கொக்கி போடலாம்என்று செல்பேசியை தட்டினார்.

ஆமா…….உங்க ஓட்டல் விஷயம்தான் ………………..சீக்கிரமா வாங்க

அமைச்சர் கையமர்த்தினார்லீனா ……. சாப்பிடு. காலையில் வெறும் வயிறாக இருக்கக் கூடாது.” என்றவர், சம்பங்கி நகர்ந்ததும் லீனாவிடம்கவர்ச்சிப் பாடலில்தான் வெறும் வயிறோடு இருக்கலாம்என்று கிசுகிசுத்தார்.

லீனாவின் வெட்கத்தை ரசித்தபடிநீங்களே சாப்பிடுங்கஎன இருவருக்கும் உணவு மேசைக்கு வழிகாடினார். தாயும் மகளும் கம்பு இட்லிகளை பதம் பார்க்கத் தொடங்கினர்.

சிறிது நொடியில் ஒரு நெடிய மனிதர் செண்ட் நெடியுடன் வந்தார் “ 

சார்…. ஆம் மேனன். ‘திரைப்பூஓனர். பொத்தேரியில் ஓட்டல் கட்டிக்கிட்டு இருக்கேன்என்றபடி அறிமுகம் ஆனார்.

அமைச்சர்உட்காருங்க. உங்கவசந்த மாளிகைவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சில சான்றிதழ்கள் சேர்க்கப்படவில்லை.” என்றபடி ஃபைலை டீப்பாய் மேல் போட்டார்.

NOT APPROVED – என எழுதி கையொப்பம் இட்டிருந்தார் அமைச்சர்.

மேனன் படபடத்தார்சார்…..எங்க வசதிக்கு ஊருக்கு வெளியேதான் ஓட்டல் கட்ட முடியும். ப்ளீஸ்……அனுமதி கொடுங்க சார்

ம்….அப்ப நடிகை லீனாவின் தவறான பேட்டியை காரணம் காட்டி நீங்களும் உங்க நிருபன் விமலனும் மிரட்டலாமா?” அமைச்சர் கணை வீசினார்.

மேனன் இந்த கணைக்கு சுருண்டார்சார்…. இப்பவே விமலனை அந்த காசட்டை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்றேன்என்றபடி செல்பேசியை உசுப்பினார்.

விமலன்….எங்கே இருக்க..”

நடிகர் சேதுகாந்த் 35வது பிறந்தநாளை கவர் பண்றியா? போதும்……..லாஸ்ட் 5 இயர்ஸா 35வது பிறந்தநாளை அவர் ரசிகர்கள் கொண்டாடறாங்க…..நீ கவர் பண்ணது போதும்”.

உடனே லீனா பேட்டியின் காசட்டோடு அமைச்சர் வேலவன் சார் வீட்டுக்கு வா

மேனன் அமைச்சரை நோக்கினார்சார்….ப்ராப்ளம் சால்வ்டு

அப்ப நானும் உங்க ஓட்டலுக்கு தரப் போறேன்என்றபடி அமைச்சர் ஃபைலை எடுத்தார்.

மேனன் புரியாமல் விழிக்க….ன்னா என்னா சார்?” எனயென வழிந்தார்.

அமைச்சர் சிரித்தபடி பேனாவை எடுத்தார்லீனாவுக்காக பேனா எடுத்தேன்என சத்தமாய் சொல்லியபடி NOT APPROVED – ல் ஒரு ‘E’ சேர்த்தார்.

இப்போது ஃபைல் NOTE – APPROVED என மாறியது. மேனன் முகம் வெளிச்சம் ஆனது.

விமலன் பவ்யமாக ஆஜரானான்ஹி….ஹிசார் காசட் இந்தாங்க
சரிடா விமல்……….முருகன் பெயர் கொண்ட அமைச்சருடன் கண்ணழகு நடிகை நெருக்கம்னு போட்றாத. நெருக்கத்தை வெறுக்குற வருக்கம் எங்க கட்சிஎன்றார் வேலவன்.

இந்த கசமுசா எல்லாம் முடிந்ததும் -  லீனாவும் சம்பங்கியும் வெளிவந்தனர்.

சார்…. ரொம்ப நன்றிஎன்றபடி லீனா ஓடிவந்து வேலவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சம்பங்கியும்தமிழ் நேசன்படிப்பது போல் பாசாங்கு செய்தாள்.

கண்ணுஇனிமே பேட்டிலாம் பாத்துக் குடுஎன லீனா முதுகை தட்டிக் கொடுத்தபடி சொன்னார் வேலவன்.

சம்பங்கி நான்காவது முறையாக கனைத்துக் காட்டியதும், வேலவன் கழுத்தை லீனா விடுவித்தாள்.   
************************