பேட்டி 1
நடிகை லீனா
வீடு முன்னே பெருங்கூட்டம் திரண்டு நின்றது.
ஹிந்து கலாசார
சங்கக் குழுவினர் கோஷம் போட்டபடி இருந்தனர்.
“இந்திய
பண்பாட்டை பழிக்காதே”
“கற்பு
என்பது பற்பசை அல்ல”
“தில்லாலே
தில்லாலே ….உன் பேட்டி நல்லால்லே”
லீனாவுக்கு இந்த கூச்சல் பிடிபடவில்லை. லீனாவின் அம்மா சம்பங்கி 100ஐ சுழற்றினாள். ”இன்ஸ்பெக்டர் பூமினாதன் இருக்காரா……”. சினிமா போலீஸ் போல் இல்லாமல், சீக்கிரமே வந்துவிட்டனர் போலீஸ்.
”இங்கே என்னய்யா பிரச்னை. எதுக்கு கூச்சல், குழப்பம்? யாருய்யா உங்க தலைவன்?” போலீஸ் தோரணைக்கு பதில் வந்தது. நீலத் துண்டு போட்ட ஒருவன் முன்னால் வந்தான்.
‘திரைப்பூ’ வார இதழை தூக்கிப் பிடித்தான் “இதுல நடிகை லீனா கொடுத்த பேட்டியில் நம் பண்பாட்டை கேவலமா பேசியிருக்காங்க”
‘கற்பு என்பது எனக்கு பெரிய விஷயமல்ல. அபார்ஷன் செய்து கொள்வது தவறல்ல’ என்று பேட்டி கொடுத்துள்ளார் – நீலத் துண்டு தலைவர் சீறினார்.
பூமினாதன்
பத்திரிக்கையை
புரட்டிவிட்டு, பதட்டமாய் லீனாவின் அம்மாவிடம் திரும்பினார் “ஏன் இப்படில்லாம் பேட்டி தர்றீங்க? வம்பை விலை கொடுத்து வாங்கறீங்க?”
சம்பங்கி லீனாவிடம் சிடுசிடுத்தாள் ”ஏண்டி……போன வாரம் ‘திரைப்பூ’வுக்கு என்ன கருமத்தை சொல்லித் தொலைச்சே? ’அபார்ஷன் செய்துகொள்வது தவறல்ல’ ன்னு சொல்லி ஏண்டி உயிர எடுக்கரே?”
”அய்ய…நான் என்ன லூசா அப்படி பேட்டி கொடுக்க” லீனா கோபப்பட்டாள்.
பூமினாதன் எரிச்சல் பட்டார் “இதுல தெளிவா போட்டிருக்கு…..நடிகை லீனா ஜில்ஜில் பேட்டி “கற்பு என்பது எனக்கு பெரிய விஷயமல்ல. அபார்ஷன் செய்து கொள்வது தவறல்ல”
”அய்யோடா …. நான் சொன்னதை அந்த மண்டு நிருபர் திரித்துப் போட்டுட்டான்” லீனா ரீவைண்ட் செய்தாள். “ திரைப்பூவிற்கு தந்த பேட்டி இதுதான்”
”நான் சக நடிகைகளை போட்டியாக நினைப்பதில்லை. நட்பு என்றே நினைத்து உதவிகள் செய்கிறேன்.
லேகாஸ்ரீ தெற்றுப்பல் சரி செய்ய “பல்மொனரி ஆர்ட்டரி” ஆபரேஷனுக்கு சிபாரிசு செய்தேன்.
ஜோஷ்னாவின் உதடுகளை சரி செய்ய “லிப்போசக்ஷன்” ஆபரேஷனுக்கு எற்பாடு செய்தேன்.
தூபிகாவின் கழுத்து வலிக்கு “நெக்டர் சர்ஜரி” ஆபரேஷனுக்கு நான்தான் உதவி செய்தேன்.
ஜிகினாஸ்ரீ சப்பைமூக்கு எடுப்பாகச் செய்ய “பாசநேச மாக்சில்லரி” ஆபரேஷனுக்கு சிபாரிசு செய்தேன்.
இப்படிதான்
சக நடிகைகளுக்கு அழகுக்கலை கற்பித்து நட்புடன் பழகுகிறேன். உடலழகை மேம்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்”
“கற்பிப்பது எனக்கு பெரிய விஷயமில்லை. ஆபரேஷன் செய்து கொள்வது தவறல்ல” என பேட்டியை முடித்திருந்தேன்.
“அடப்பாவீ….இதை “கற்பு என்பது எனக்கு பெரிய விஷயமில்லை. அபார்ஷன் செய்து கொள்வது தவறல்ல”ன்னு போட்டிருக்கானே பாவி நிருபர்?” லீனாவின் பெரிய விழிகள் மேலும் விரிந்தன.
”சார் இப்ப என்ன பண்றது?” சம்பங்கி கேட்டாள். “சார் …சார்” என்று கூவ பூமினாதன் லீனாவின் கண்ணழகை ரசிப்பதை விட்டு சுதாரித்தார்.
”ஆங்……கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கு. மன்னிப்பு கேட்டுருங்க” என்றார் பூமினாதன். சம்பங்கி “அய்யோ… மன்னிப்பு கேக்கறதா. மற்றவளுங்க லீனாவை மதிப்பாளுகளா? ஏகத்துக்கு வடனாட்டு குட்டிங்க கோடம்பாக்கத்துல
குந்தியிருக்காளுக. இதுல மன்னிப்பு வேறயா?” என ஒப்பாரி வைத்தாள்.
லீனா பல்லைக் கடித்தாள். ”அம்மா புலம்பாத” செல்பேசியின் பொத்தன்களை தட்டி, தேன் தடவினாள் “சார்… சார் .. ஒரு சின்ன ப்ரச்னை…” சொல்லி முடிக்கும்போது 28 முறை ‘சார்’ போட்டிருந்தாள்.
செல்பேசி பூமினாதன் கைக்குப் போனது. “அமைச்சர் வேலவன் பேசறார்” லீனா கிசுகிசுப்பாய் சொல்ல, “சொல்லுங்க சார்” என 29ல் தொடங்கி 47வது சாரோடு நிறுத்தினார் பூமினாதன்.
“அமைச்சர் திட்டம் ஒன்னு சொல்லியிருக்காரு. போராட்டத் தலைவனை படிய வெச்சுடலாம் ” என்றபடி வாசல்படி போனபடி இருந்தார்.
நீலத்துண்டு தலைவன், பூமினாதன் வெளிவந்ததும் மேலும் உற்சாகமாக கோஷமிட்டான்.
”வள்ளுவர் பூமியில் வெள்ளோட்டம் பார்க்காதே”
“கண்ணகி மண்ணை விட்டு, கண்ணழகியே ஓடு”
பூமினாதன் கையமர்த்தினார் “ தம்பிகளே. பேட்டி கொடுத்தது லீனா குப்தா என்ற இந்தி நடிகை. தமிழ் நடிகை லீனா கிடையாது. ‘திரைப்பூ’ விளக்கம் கொடுத்துள்ளது. ”
பூமினாதன் விளக்கம் கேட்டதும் பல வில்லன்கள் விலகினர்; சில விளக்கெண்ணைகள் கோஷம் போடுவதை நிறுத்தினர். லீனா வீடுமுன்
அமைதி வந்தது.
“ஹி…ஹி…. அமைச்சர் வரை போய்ட்டீங்களே. இப்போ ‘சத்தமின்றி முத்தமிடு’ படத்தில்தானே நடிக்கறீங்க” பூமினாதன் தன் சினி அறிவை காட்டிவிடு விடை பெற்றார்.
No comments:
Post a Comment