பேட்டி 3
நடிகை லீனாவும், அவள்
அம்மா சம்பங்கியும் அமைச்சர் வேலவன் முன் பதைபதைப்பாக நின்றிருந்தனர். ’தமிழ் நேசன்’ படித்துக்கொண்டிருந்த அமைச்சர் வேலவன் “என்ன லீனா…..இவ்வளவு படபடப்பு? இல்லையா படப்பிடிப்பு?” என்றார் கவித்துவமாக.
சம்பங்கி ”லீனா ……போன வாரம் ‘திரைப்பூ’வுக்கு ஒரு பேட்டி கொடுத்தாள். அது இப்போ பெரிய ப்ரச்னை ஆயிடுச்சு” என படபடத்தாள்.
“பேட்டியும் போட்டியும் திரையுலகில் சகஜம்தானே?”
”அய்ய…இவ கொடுத்த பேட்டியை
அந்த நிருபர் விமலன் பதிவு செய்து மிரட்டறான்”
”அப்படி
என்ன கண்ணு சொன்னே? அரசியல் வசனம் ஏதும் பேசிட்டியா”
”அய்யோடா …. நான் சொன்னது என்னன்னா ‘குச்சுப்புடி
கலை தெரிந்ததால் திரை உலகில் முன்னேற முடிந்தது’ என்று. அந்த மண்டு நிருபர் அதை பதிவு பண்ணிட்டு இப்ப மிரட்டறான்”
லீனா ரீவைண்ட் செய்தாள்.
”இதுல என்ன தவறு? எதுக்கு அந்த விமலன் உன்னை மிரட்டணும்?” வேலவன் குறுக்கிட்டார்.
” அது…..அது வந்து…………”
லீனாவின் பெரிய விழிகள் மேலும் விரிந்தன.
“சொல்லு கண்ணு. சொன்னால்தானே சரி செய்ய முடியும். உன்னை மாதிரி தமிழ் நங்கைகளுக்கு உதவதானே அமைச்சர் பதவி”
“……………..” லீனா தலை குனிந்தபடி நின்றாள்.
அமைச்சர் சம்பங்கியை நோக்கினார்.
”சார் ………. ‘குச்சுப்புடி கலை தெரிந்ததால்
திரை உலகில் முன்னேற முடிந்தது’ என்று இவள் சொல்றப்ப
‘குச்சுப்புடி’க்கு பதிலா நாக்குழறி மாற்றிச் சொல்லிட்டா. இப்ப
என்ன பண்றது?” சம்பங்கி கேட்டாள்.
வேலவன் சிரித்து விட்டார். லீனாவை மேலும் கீழும் பார்த்தார்
”குச்சுப்புடிக்கு பதிலா என்ன கண்ணு சொன்னே?”
”குச்சுப்புடிக்கு பதிலா என்ன கண்ணு சொன்னே?”
“சார் …போங்க சார்” என்று லீனா தவிப்பதை ரசிப்பதை விட்டு சுதாரித்தார்.
சம்பங்கி “அய்யோ… இதை பெரிசுபடுத்தி விமலன் போடறதா மிரட்டறான். 10 லட்சம் பணம் கேக்குறான். இது தெரிஞ்சா மற்றவளுங்க லீனாவை மதிப்பாளுகளா? ஏகத்துக்கு வடனாட்டு குட்டிங்க கோடம்பாக்கத்துல
குந்தியிருக்காளுக. இதுல இவ பேரு ரிப்பேர் ஆனா என்ன பண்றது” என ஒப்பாரி வைத்தாள்.
லீனா பல்லைக் கடித்தாள். ”அம்மா புலம்பாத” என்றபடி அமைச்ச்ரிடம் தேன் தடவினாள் “சார்… சார் .. இந்த சின்ன ப்ரச்னையை நீங்கதான்
தீர்த்து வைக்கணும்…”
அமைச்சர் வேலவன் யோசித்தார் ”திரைப்பூ குழு ‘வசந்த மாளிகை’னு பொத்தேரியில ஒரு ஓட்டல் கட்டறான். இரு அவனை கொக்கி போடலாம்” என்று செல்பேசியை தட்டினார்.
“ஆமா…….உங்க ஓட்டல் விஷயம்தான் ………………..சீக்கிரமா வாங்க”
அமைச்சர் கையமர்த்தினார் “ லீனா ……. சாப்பிடு. காலையில் வெறும் வயிறாக இருக்கக் கூடாது.” என்றவர், சம்பங்கி நகர்ந்ததும் லீனாவிடம் “கவர்ச்சிப் பாடலில்தான் வெறும் வயிறோடு இருக்கலாம்” என்று கிசுகிசுத்தார்.
லீனாவின் வெட்கத்தை
ரசித்தபடி “நீங்களே சாப்பிடுங்க” என இருவருக்கும் உணவு
மேசைக்கு வழிகாடினார். தாயும் மகளும் கம்பு இட்லிகளை பதம் பார்க்கத்
தொடங்கினர்.
சிறிது நொடியில் ஒரு நெடிய மனிதர் செண்ட் நெடியுடன் வந்தார் “
சார்….ஐ ஆம் மேனன். ‘திரைப்பூ’ ஓனர். பொத்தேரியில் ஓட்டல் கட்டிக்கிட்டு இருக்கேன்” என்றபடி அறிமுகம் ஆனார்.
சார்….ஐ ஆம் மேனன். ‘திரைப்பூ’ ஓனர். பொத்தேரியில் ஓட்டல் கட்டிக்கிட்டு இருக்கேன்” என்றபடி அறிமுகம் ஆனார்.
அமைச்சர் “உட்காருங்க. உங்க ‘வசந்த மாளிகை’ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சில சான்றிதழ்கள் சேர்க்கப்படவில்லை.” என்றபடி ஃபைலை டீப்பாய் மேல் போட்டார்.
NOT APPROVED – என எழுதி கையொப்பம் இட்டிருந்தார் அமைச்சர்.
மேனன் படபடத்தார் “சார்…..எங்க வசதிக்கு ஊருக்கு வெளியேதான் ஓட்டல் கட்ட முடியும். ப்ளீஸ்……அனுமதி கொடுங்க சார்”
”ம்….அப்ப நடிகை லீனாவின் தவறான பேட்டியை காரணம் காட்டி நீங்களும் உங்க நிருபன் விமலனும் மிரட்டலாமா?” அமைச்சர் கணை வீசினார்.
மேனன் இந்த கணைக்கு சுருண்டார் “சார்…. இப்பவே விமலனை அந்த காசட்டை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்றேன்” என்றபடி செல்பேசியை உசுப்பினார்.
“விமலன்….எங்கே இருக்க..”
“நடிகர் சேதுகாந்த் 35வது பிறந்தநாளை கவர் பண்றியா? போதும்……..லாஸ்ட் 5 இயர்ஸா 35வது பிறந்தநாளை அவர் ரசிகர்கள் கொண்டாடறாங்க…..நீ கவர் பண்ணது போதும்”.
“உடனே லீனா பேட்டியின் காசட்டோடு அமைச்சர் வேலவன் சார் வீட்டுக்கு வா”
மேனன் அமைச்சரை நோக்கினார் “சார்….ப்ராப்ளம் சால்வ்டு”
“அப்ப நானும் உங்க ஓட்டலுக்கு ஈ தரப் போறேன்” என்றபடி அமைச்சர் ஃபைலை எடுத்தார்.
மேனன் புரியாமல் விழிக்க “ஈ….ன்னா என்னா சார்?” என ‘ஈ’யென வழிந்தார்.
அமைச்சர் சிரித்தபடி பேனாவை எடுத்தார் “லீனாவுக்காக பேனா எடுத்தேன்” என சத்தமாய் சொல்லியபடி NOT APPROVED – ல் ஒரு ‘E’ சேர்த்தார்.
இப்போது ஃபைல் NOTE – APPROVED என மாறியது. மேனன் முகம் வெளிச்சம் ஆனது.
விமலன் பவ்யமாக ஆஜரானான் “ஹி….ஹி…சார் காசட் இந்தாங்க”
“சரிடா விமல்……….முருகன் பெயர் கொண்ட அமைச்சருடன் கண்ணழகு நடிகை நெருக்கம்னு போட்றாத. நெருக்கத்தை வெறுக்குற வருக்கம் எங்க கட்சி” என்றார் வேலவன்.
இந்த கசமுசா எல்லாம் முடிந்ததும் - லீனாவும்
சம்பங்கியும் வெளிவந்தனர்.
“சார்…. ரொம்ப நன்றி” என்றபடி லீனா ஓடிவந்து வேலவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சம்பங்கியும் ‘தமிழ் நேசன்’ படிப்பது போல் பாசாங்கு செய்தாள்.
“கண்ணு … இனிமே பேட்டிலாம் பாத்துக் குடு” என லீனா முதுகை தட்டிக் கொடுத்தபடி சொன்னார் வேலவன்.
சம்பங்கி நான்காவது முறையாக கனைத்துக் காட்டியதும், வேலவன் கழுத்தை லீனா விடுவித்தாள்.
************************
No comments:
Post a Comment