Thursday 7 March 2013

வேகமும் விவேகமும் TAMILNADU NEW TRAINS


வேகமும் விவேகமும்

ரயில்
தூரம் (கி.மீ)
பயண நேரம்
சென்னை-தூத்துக்குடி  முத்துநகர் விரைவுவண்டி
650
12
சென்னை- நெல்லை விரைவுவண்டி
650
12
சென்னை-கன்னியாகுமரி விரைவுவண்டி
750
14
சென்னை-தென்காசி பொதிகை விரைவுவண்டி
700
13
சென்னை- நாகர்கோவில் விரைவுவண்டி
700
13
சென்னை-ராமேஸ்வரம் சேது விரைவுவண்டி
600
11

உங்களுக்கு இந்த அட்டவணை மூலம் ஏதும் புரியாவிட்டால் www.tnrailways.blogspot  சென்று பார்க்கவும். வேகமும் விவேகமும்




மேலே அட்டவணையில் உள்ள வண்டிகள் எல்லாமே மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பயணம் செய்கின்றனஒரு வண்டியை தவிர மற்ற எல்லா வண்டிகளுக்கும் அதிவிரைவு கட்டணம் ரூ. 30 அதிகப்படியாக வசூல் செய்கிறது ரயில்வே.
அந்த ஒரு வண்டி---- ராமேஸ்வரம்  சேது ரயிலுக்கு மட்டும் இந்த அதிவிரைவு கட்டணம் ரூ. 30 அதிகப்படியாக வசூல் செய்யப்படுவது இல்லை. ஏன் இந்த கரிசனம்? இந்த ரயிலில் வடநாட்டு பக்தர்கள் செல்வதால் இவ்வளவு கரிசனம்.
நம் மக்கள் சேது விரைவுவண்டியை பயன்படுத்த முடியாதபடி நேர அட்டவணை உள்ளது. ஊரும் , சேரும் நேரமும் கீழே உள்ளன :
காரைக்குடி       நள்ளி ரவு 12.30
சிவகங்கை                1.20
மானாமதுரை         1.50
பரமக்குடி                 2.20
ராமனாதபுரம் அதிகாலை   3.00

இப்படி நள்ளிரவு நேரத்தில் குடும்பத்துடன் போய் இறங்கி , நாம் ஏன் தவிக்க வேண்டும்? சேது ரயில் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு கிளம்பினால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும். ஆனால், வடநாட்டு பக்தர்களின் வசதிதானே முக்கியம்.

சேது ரயிலில் சிவகங்கை மாவட்டதிற்கு (காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை) 60 சீட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி 350 சீட்டுக்களும் பரமக்குடி,. ராம்நாதபுரம் & ராமேஸ்வரம் மக்களுக்கு!     சேது ரயில் பரமக்குடி,. ராம்நாதபுரம் ஊர்களுக்கு அகால நேரத்தில் செல்வதால், ராமேஸ்வரம் பக்தர்களே பயன் பெருகின்றனர்.
அதே போல் ராமேஸ்வரம்-சென்னை (6702) வண்டியில் 60 சீட்டுகள் மட்டுமே தாம்பரம் வரை ஒதுக்கப்பட்டு, மீதி 350 சீட்டுகள் எழும்பூர் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.. இது மேலோட்டமாய் பார்த்தால் பெரிய விஷயமாய் தெரியாது. ஆனால் வடநாட்டு பயணிகள் அனைவரும் எழும்பூர் சென்றே, சென்ட்ரலில் ரயில் ஏறுவார்கள். (எந்த வடநாட்டானும் செங்கல்பட்டில் இறங்கி சென்ட்ரல் செல்ல மாட்டான்). அவர்கள் வசதிக்குதான் இப்படி ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய அரசு.
தமிழர்கள்? ரூ.100 அதிகம் செலுத்தி தட்கல் (அரசாங்கமே விற்கும் பிளாக் டிக்கெட்) மூலம் பயணம் செய்து கொள்ளலாம்.
----------------------------------------------------------

No comments:

Post a Comment